yesterday protest
இலங்கைஅரசியல்செய்திகள்

ஏழரையின் பிடியில் இலங்கை!!

Share

ஏழு மூளை உள்ளவரின் செயற்பட்டவரால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பாதுகாப்பதற்காக அதிகாரத்தைக் கோரியவர்கள் தற்போது நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று பிற்பகல் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள சீனக்குடாவில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

1924 ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கிகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1930 அளவில் 101 எண்ணெய் தாங்கிகளும் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டன.

சிட்னியை அடுத்து இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுவதால் துறைமுகத்தை அண்டிய பகுதியில் இவை நிர்மாணிக்கப்பட்டன.

இதில் ஒரு தாங்கியில் 12000 டொன் எண்ணெய் சேமிக்க முடியும் மொத்தமாக 1.2 மில்லியன் டொன் எண்ணெய் இதில் சேமிக்க முடியும். இதில் 15 தாங்கிகள் ஏற்கனவே 2004 இல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

இப்படிப்பட நிலை காணப்படும் போது, இன்று அமெரிக்க பிரஜைகள் சுகபோக வாழ்க்கையினை வாழும் போது, நமது நாட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழு மூளை உள்ளவரின் செயலால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...