mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தின் பிடியில் இலங்கை! – கூறுகிறார் மஹிந்த

Share

இலங்கையின் பொருளாதாரத்தின் பின்னணியில் சர்வதேச சக்தியொன்று செயற்படுவதாகவும், இந்த சக்தி இன்னும் செயற்படுவதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

இந்த சக்திகளின் உள்ளூர் முகவர்கள் இன்னும் செயலில் உள்ளனர்.தேசத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்தவர்கள் அவர்கள்தான். அவர்களின் நடவடிக்கை சுற்றுலாத் துறையை பாதிக்கிறது, இது இப்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

வரவு -செலவுத் திட்டம் 2023 சில துறைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்றாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான மாபெரும் பாய்ச்சலாகும். வரவு -செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. நஷ்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இருப்பினும் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசிய சொத்துக்களை வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பதற்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றும் கூறினார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...