Untitled 1 24 scaled
இலங்கைசெய்திகள்

அதிசய நாடாக மாறிய இலங்கை – கிடக்கும் பொக்கிஷங்கள்!!

Share

இலங்கையின் தென் பகுதியிலுள்ள புவியியல் நிலை உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியமாக உள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இருப்பதனால் இலங்கையை ஒரு பெரிய விண்வெளி போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கை மையமாகவும் சுற்றுலா மையமாகவும் மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாசாவினால் வெளிப்படுத்திய தகவலுக்கமைய, இலங்கையின் தெற்குப் பகுதியானது உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியத்தில் இருக்கும் தனித்துவமான புவியியல் நிலையைக் கொண்டிருந்தது.

பேராசிரியர் ஆதர் சி கிளார்க் முன்னர் கூறியது போல் உலகின் சிறந்த குறைந்த விலை சர்வதேச விண்வெளி துறைமுகத்தை அல்லது சர்வதேச விண்வெளி உயர்த்தியை உருவாக்க இந்த சூழ்நிலை பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆழமான அகழ்வாராய்ச்சியின் மூலம் நிலத்தடி பொக்கிஷங்களை வெளிக் கொண்டுவரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டியுள்ளார்.

விசேட அந்த பகுதிக்கு செல்லும் நபர்களுக்கு எடை குறைப்பு நிலை ஏற்படும் என்பதனால் சுகாதார சேவைகளுக்காக சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்கால வளமான முதலீட்டு வாய்ப்பை நாம் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...