அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Share

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(18.07.2023) இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடரந்தும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றது. இதனால், அரச ஊழியர்களான வேட்பாளர்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து 533 அரச ஊழியர்கள் இதில் அடங்குகின்றனர்.

அதுமட்டுமின்றி, மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். பகுதி பொது அரச சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். சில அரசு ஊழியர்கள் மார்ச் முதல் அடிப்படை சம்பளம் மட்டுமே பெற்றுள்ளனர். எந்த சலுகையும் பெறப்படவில்லை.

மேலும், சில அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரசு ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது. இது அவர்களின் பதவி உயர்வுகளைப் பாதிக்கிறது.

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவை தீர்க்கப்படவில்லை. நிரந்தர சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என குறிப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....