ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

Share

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அலுவலகத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 3,044 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 5,457 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அதற்கான அடிப்படை மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், சில ஒதுக்கீடுகள் 25% இலிருந்து 760% வரை பாரிய தொகையால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய வருடாந்த மதிப்பீடுகளை தயாரிப்பதில் உரிய கணக்கியல் உத்தியோகத்தர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் பெருமளவான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதற்கான சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...