உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல்
இலங்கைசெய்திகள்

உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல்

Share

உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்: அதிர்ச்சி தகவல்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் குறித்து “லெர்ன் ஏசியா இன்ஸ்டிட்யூட்” நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 5.97 மில்லியன் என்றும், அதில் 32 சதவீதமானோர் அதாவது 1.9 மில்லியன் குடியிருப்பாளர்களில் 7.9 மில்லியன் பேர் உணவு கொள்வனவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நகைகள் மட்டுமின்றி மரச்சாமான்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் அல்லது நாற்காலிகள், மேசைகள், படுக்கைகள் போன்றவற்றையும் மக்கள் விற்பனை செய்து உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 07 குடும்பங்களின் இருவருக்கு உணவு வழங்குவது மட்டுப்படுத்துவதாக உலக உணவுத் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

அத்தோடு ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் 08 குடும்பங்கள் ஈட்டும் தற்போதைய வருமானம், பொருளாதார சிக்கல் நிலைக்கு முன்னர் ஈட்டிய வருமானத்தை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...