8 7 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

இலங்கை தனது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கால அட்டவணைக்குள் முடிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டாவது தவணை நிதியுதவியை பெறுவதற்கான பாதையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதனை தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுப்ரமணியன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இரண்டாவது தவணையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடமிருந்து அனுமதி பெறப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...