24 660b95dbad8d8
இலங்கைசெய்திகள்

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

Share

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

கடந்த வருடம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த சில வர்த்தகர்கள் 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபமீட்டியுள்ளதாக வெளிக்கொணரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தவிசாளராக செயற்படுகின்ற வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று (01.3.2024) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஊடாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, உலர்த்தப்பட்ட நெத்திலி, மாசிக் கருவாடு, பாசிப்பயறு ஆகியவற்றின் ஊடாக சம்பாதித்த விதம் வெளிக்கொணரப்பட்டது.

2022ஆம் ஆண்டில் துறைமுகத்தில் இறக்கப்பட்ட போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 103 ரூபாவாகும்.

இது காப்புறுதி, கொள்கலன் கட்டணம், இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள் உள்ளடங்கிய விலையாகும்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கொழும்பு சந்தையில் 213 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 109 ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த இலாபம் 273 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்த பொருட்களை விற்பனை செய்ததன் ஊடாக ஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறான இலாபத்தை பெற்றுள்ளதாக வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விசேட வர்த்தக வரி கொள்கலன் கட்டணம் உள்ளடங்களாக ஒரு கிலோகிராமுக்கான செலவிற்கும் சந்தையில் விற்பனை விலைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை தொடர்பாக தெரிவுக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வேறுபாடு ஊடாக கிடைத்த இலாபம் 100 ரூபாவில் இருந்து 1000 ரூபா வரை காணப்படுகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...