24 660b95dbad8d8
இலங்கைசெய்திகள்

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

Share

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

கடந்த வருடம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த சில வர்த்தகர்கள் 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபமீட்டியுள்ளதாக வெளிக்கொணரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தவிசாளராக செயற்படுகின்ற வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று (01.3.2024) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஊடாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, உலர்த்தப்பட்ட நெத்திலி, மாசிக் கருவாடு, பாசிப்பயறு ஆகியவற்றின் ஊடாக சம்பாதித்த விதம் வெளிக்கொணரப்பட்டது.

2022ஆம் ஆண்டில் துறைமுகத்தில் இறக்கப்பட்ட போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 103 ரூபாவாகும்.

இது காப்புறுதி, கொள்கலன் கட்டணம், இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள் உள்ளடங்கிய விலையாகும்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கொழும்பு சந்தையில் 213 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 109 ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த இலாபம் 273 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்த பொருட்களை விற்பனை செய்ததன் ஊடாக ஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறான இலாபத்தை பெற்றுள்ளதாக வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விசேட வர்த்தக வரி கொள்கலன் கட்டணம் உள்ளடங்களாக ஒரு கிலோகிராமுக்கான செலவிற்கும் சந்தையில் விற்பனை விலைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை தொடர்பாக தெரிவுக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வேறுபாடு ஊடாக கிடைத்த இலாபம் 100 ரூபாவில் இருந்து 1000 ரூபா வரை காணப்படுகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...