tamilnid scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

Share

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபா பெறுமதியுடை பொருள் ஒன்றை கொள்வனவு செய்திருந்தால் அந்த பொருளின் விலை தற்போது 202 ரூபாவாக இருக்கும் என சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டினுடைய பணவீக்கம் குறைந்திருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2022ஆம் ஆண்டு 7.8 வீதத்தால் எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது. வரலாற்றில் ஒரு நாளும் அவ்வாறு எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது இல்லை.

கடந்த வருடம் கூட 3.6 வீதத்தால் பொருளாதாரம் சுருங்கியிருந்தது. ஆனால் இந்த வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பணவீக்கத்தை எடுத்துப் பார்த்தால் 2021ஆம் ஆண்டு 100ஆக இருந்தது தற்போது 202 ஆக இருக்கின்றது.

அதாவது, 2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்திருந்தால் அது தற்போது 202 ரூபா பெறுமதியாக இருக்கும். ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லை. கூலித் தொழிலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய மாதாந்த வருமானம் குறைந்திருக்கின்றது.

அவர்களுக்கான வேலை நாட்கள் இப்போது இல்லை. இப்போது நாங்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றோம். மக்களுடைய வருமானத்தில் வரி ஈட்டுவது சாத்தியப்படாது. செல்வந்தர்களின் சொத்தில் இருந்து வரியை எடுத்தால் தான் நாங்கள் நாட்டுக்கான முதலீடுகள் அனைத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....