சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்விளையாட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

Share

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க தட்டிச் சென்றுள்ளார்.

ஸிம்பாப்வேயில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில், அவருக்கு இவ்விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர்.

எனினும், இவர்களை விஞ்சி, வனிந்து ஹசரங்க இவ்விருதை வென்றுள்ளார் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நாம் தகுதி பெற்றுள்ளதால், இலங்கைக்கு முக்கியமான ஒரு தருணத்தில் இவ்விருது கிடைத்துள்ளது.

மாதத்திற்கான ஐ.சி.சியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதால் நான் கௌரவமும் அடைந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

சனிந்து ஹசரங்க, கடந்த ஜூன் மாதத்தில் 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதுடன், தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 5 விக்கெட் குவியலையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர்
இதற்கு முன் வக்கார் யூனிஸ் மாத்திரமே 1990ஆம் ஆண்டில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

கடந்த மாதம் 91 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பிரிவில் கடந்த ஜூன் மாதத்துக்கான ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைக்கான விருதை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...