சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்விளையாட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

Share

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க தட்டிச் சென்றுள்ளார்.

ஸிம்பாப்வேயில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில், அவருக்கு இவ்விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர்.

எனினும், இவர்களை விஞ்சி, வனிந்து ஹசரங்க இவ்விருதை வென்றுள்ளார் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நாம் தகுதி பெற்றுள்ளதால், இலங்கைக்கு முக்கியமான ஒரு தருணத்தில் இவ்விருது கிடைத்துள்ளது.

மாதத்திற்கான ஐ.சி.சியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதால் நான் கௌரவமும் அடைந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

சனிந்து ஹசரங்க, கடந்த ஜூன் மாதத்தில் 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதுடன், தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 5 விக்கெட் குவியலையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர்
இதற்கு முன் வக்கார் யூனிஸ் மாத்திரமே 1990ஆம் ஆண்டில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

கடந்த மாதம் 91 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பிரிவில் கடந்த ஜூன் மாதத்துக்கான ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைக்கான விருதை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...