ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவப் படையினர், மண்சரிவால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து சுமார் 5.3 மில்லியன் ரூபாய் (53 இலட்சம்) மதிப்புள்ள தனிப்பட்ட உடைமைகளை மீட்டு, அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹங்குரான்கெத்தை பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி, வீடு முற்றிலுமாக அழிந்திருந்த ஒரு வீட்டு உரிமையாளருக்கே இந்த மதிப்புமிக்க உடைமைகள் மீட்டுக் கொடுக்கப்பட்டன.
துப்புரவு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளிலிருந்து இராணுவத்தினர் பின்வரும் பொருட்களை மீட்டனர். டத்தப்பட்ட துப்புரவு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ. 300,000 ரொக்க பணத்தைபடையினர் மீட்டனர்.
அனர்த்த காலத்தில் இராணுவம் மேற்கொண்டுள்ள இந்தப் பொறுப்புணர்வு மற்றும் மனிதாபிமான செயல்பாடு பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

