1 1 32
இலங்கைசெய்திகள்

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

Share

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மூலோபாய திட்டத்தினை உருவாக்கும் நோக்கில் முப்படைகளின் வசமுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் (Northern Province) முப்படையினரின் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலைவர் ச.சதுன் தலைமையில் நடத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளின் தரவுகள் பட்டியல் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவில் இல்லாத காணிகளை தரவுகளை தரப்படுத்தல் வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவின் காணி சுபீகரிப்பு, பெளத்த மயமாக்கல் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு விசேட கலந்துரையாடல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மாயமாக்கல், தொல்பொருள் அகழ்வு, பெளத்த மயமாக்கல், காணி அதிகாரத்தினை மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும், மதங்களால் உள்ள முரண்பாடுகள், இனங்களுக்கிடையில் பிரச்சினை, வனவிலங்கு அரச திணைக்களங்கள் மக்களின் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டப்டடுள்ளன.

மேலும், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் காணிகளை கொண்டுள்ள மக்கள் தமது காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....