15 19
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடு

Share

கொழும்பில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பொதுக்கூட்டங்களை சுமூகமாக நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பேரணிகள் காரணமாக சில வீதிகள் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:

அந்தவகையில் கொழும்பு மாவட்ட கிராண்ட்பாஸில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் இறுதிப் பேரணி காரணமாக கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் நெரிசல் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதானையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச தனது இறுதிப் பேரணியை நடத்துவதால் மருதானையைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

நுகேகொடயில் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பேரணி நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.

பிலியந்தலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இறுதிக் கூட்டத்தில் பிலியந்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள் பாதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பயண வழிகளை அதற்கேற்ப திட்டமிட்டு, முடிந்தவரையில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...