rtjy 216 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அராஜகத்துக்கு உடன் முடிவு கட்டுங்கள்

Share

பொலிஸ் அராஜகத்துக்கு உடன் முடிவு கட்டுங்கள்

“வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் பொலிஸாரின் அராஜகம் தொடர்ந்து வருகின்றது. அவர்களால் சந்தேகநபர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய பொலிஸார் தொடர்ந்தும் அராஜகம் புரிந்து வருகின்றனர். அவர்களால் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கொடூர சித்திரவதைகள் மூலம் அவர்கள் கொலை செய்து வருகின்றனர்.

அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் பொலிஸாரின் மோசமான சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...

mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...