download 11 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே தின பேரணிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

Share

மே தின பேரணிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் விசேட மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் மாத்திரம் 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பேரணிகளுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

 

பேரணிகள் நடத்தப்படும் பகுதிகளில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குறித்த பணிகள் கண்காணிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீதியின் ஒரு மருங்கினை மாத்திரம் பயன்படுத்தி பேரணிகளை முன்னெடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.

மேலும், மக்களை அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில், வாகனங்களைத் தரிப்பது மற்றும் ஏனைய முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...