13 2
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

Share

பொதுமக்களுக்கு பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் ரக வாகனத்தின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதன்படி, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நகர போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமால் புஸ்பகுமார பணிப்புரை விடுத்திருந்தார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நகர்ப்புற போக்குவரத்துப் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகளால் ஏதேனும் அத்துமீறல்கள் பொது மக்களுக்கு இருந்தால் முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

நகர்ப்புற போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளையும், புறக்கோட்டை, கோட்டை, மருதானை மற்றும் கொழும்பை சுற்றியுள்ள 53 பொலிஸ் நிலையங்களையும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...