சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், அவசரகால சட்டம் மற்றும அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்கள் சம்பந்தமான இதன்போது ஆராயப்படவுள்ளன.
#SrilankaNews