25 6
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்

Share

அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம், பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் இலங்கையுடனான தனது நாட்டின் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்திப்பின் ஒரு பகுதியாக, உயர்ஸ்தானிகர் அஜீஸ், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் வாழ்த்துக் கடிதத்தை இலங்கை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை பாகிஸ்தானிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையுடனான அதன் நெருங்கிய உறவுகளை ஆழமாக மதிக்கிறது. அத்துடன், இரண்டு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜனாதிபதி சர்தாரி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....