images 1
இலங்கைசெய்திகள்

இலங்கையிலும் ஓமிக்ரான் துணை வகைகள்! கோவிட் தொற்று தொடர்பில் விசேட அறிவிப்பு

Share

தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் வைரஸ் தொடர்பான நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ நிபுணருமாக ஜூட் ஜெயமஹா, இதனை அறிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த துணை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தேவையற்ற எச்சரிக்கை அவசியமில்லை என்று ஜெயமஹா வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 வைரஸின் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலம் சுகாதாரத் துறை விழிப்புடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முகக்கவசங்கi அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய முன்னேற்றத்தில், காலி தேசிய மருத்துவமனையில் அண்மையில் மரணமான, ஒன்றரை மாதக் குழந்தை ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டது என்று மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த திரிபு தற்போது ஆசியாவில் பரவி வரும் புதிய துணை வகைகளில் ஒன்றாக அடையாளம் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...