21 15
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான இடமாக மாறியுள்ள தென் மாகாணம்

Share

இலங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இரண்டாவது மாகாணமாக தென் மாகாணம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய ஒரு அறிவியல் ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியை ருஹுணு பல்கலைக்கழகம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியின் மூலம் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பந்து ஹரிச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறும் மாகாணமாக மேல் மாகாணம் பதிவாகி உள்ளது. பாதுகாப்புக் குழுவில், குற்றங்களுக்கு காரணமான சமூகப் பிரச்சினைகளை ஆராய அறிவியல் ஆராய்ச்சி நடத்த முடிவு செய்தோம்.

போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குற்றங்களுக்கு காரணமா? நில அபகரிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

குற்றங்கள், குற்ற இடங்கள் மற்றும் நீதிமன்ற தண்டனை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் பொலிஸாரிடம் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...