மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!!

Murder

மாமனாரை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – சேகுவந்தீவு பகுதியில் இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மதுபோதையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தழுவப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த சந்தேக நபர் புதுவருட தினத்தன்று குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற நிலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

#SrilankaNews

Exit mobile version