15 16
இலங்கைசெய்திகள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் : டக்ளஸ் தெரிவிப்பு

Share

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் : டக்ளஸ் தெரிவிப்பு

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (17) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில், யாழ் தேர்தல் தொகுதியில் கணிசமான ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

இலங்கையில் ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பார் என நாங்கள் எதிர்பார்த்து ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டு இருந்தோம்.

ஆனாலும் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்பி கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள்.

ஜே.வி.பிக்கும் எங்களுக்கும் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு உள்ளது. மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.

அதாவது அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் அதில் ஒரு அரசியல்வாதி தன்னுடைய பார் லைசன்ஸை வெளியிட வேண்டாம் என்று கேட்டிருக்கின்றார்.

சக வேட்பாளர் அவற்றை வெளியிட வேண்டும் என கேட்டு இருக்கின்றார். நான் அவ்வாறு கேட்கவில்லை. இந்திய கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக பேசவுள்ளேன்.

நாங்கள், ஆட்சியில் சம்பள உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போதைய ஜனாதிபதி சம்பள உயர்வு தற்போதைக்கு சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.பொருட்களின் விலைகள் சரியாக குறைக்கப்படவில்லை.

அதைவிட இவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதிக கடன்களை பெற்றிருக்கின்றார்கள் எதிர்காலத்தில் பழையபடி வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை கூட ஏற்படுகின்றதோ தெரியாது.

இந்நிலையில், நாம் எதிர்காலத்தில் தென்னிலங்கையுடன் அரசியல் கலந்துரையாடல்களை செய்யவிருக்கின்றோம்” என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...