32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

Share

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அமைப்பது தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பலமில்லாத உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை குழப்பும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு மாத காலத்தில் பொதுஜன முன்னணியின் வாக்கு பலம் 300 வீதமாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...