tamilni 27 scaled
இலங்கைசெய்திகள்

சஜித் கூட்டணியில் இணையும் மொட்டுக்கட்சியினர்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பரந்த கூட்டணியில் இணைந்து செயற்படும் நோக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுஜன பெரமுனவில் இருந்து குறித்த இருவரும் வெளியேறிய பின் அவர்கள் அங்கம் வகித்த அணியின் தலைவரான டளஸ் அழகப்பெரும இன்னும் எதிர்க்கட்சி கூட்டணியில் இணையும் நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த கூட்டணியின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, தாம் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூட்டணியை விரைவாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....