2 23
இலங்கைசெய்திகள்

மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : அநுர அரசுக்கு விழப்போகும் பேரிடி

Share

மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : அநுர அரசுக்கு விழப்போகும் பேரிடி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் (SLPP) ஒரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (11.02.2025) காலை நடைபெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) மற்றும் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ஆகியோரின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதமும் இது போன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது போது, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த கலந்துரையாடல் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...