12 scaled
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலிய – உக்ரைனிய பயணிகளால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஆபத்து

Share

இஸ்ரேலிய – உக்ரைனிய பயணிகளால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஆபத்து

இஸ்ரேல், உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னிலங்கையில் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், தற்போது இஸ்ரேலிய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் இலங்கையில் பாரியளவான சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை உள்நாட்டு சுற்றுலாத்துறையினர் மத்தியில் இது குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

தென்னிலங்கை கடற்கரையோரம் முழுவதும் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளனர்.

அவர்கள் உணவுவிடுதிகள், ஹோட்டல்கள், சிறிய கடைகள் போன்றவற்றை நடத்துகின்றனர். இலங்கையில் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் அளவிற்கு உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொண்டுள்ளதாக உள்ளுர் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், அவர்கள் எந்தவொரு வர்த்தக நடவடிக்கைக்கும் முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் உள்ளுர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் மோதும் நிலையேற்படும் என உள்ளுர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வர்த்தக செயற்பாடுகளில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடுவதால் இந்த நிலைமையேற்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தென்னிலங்கையின் கடற்கரையோரங்கள் மற்றும் அண்மித்த நிலப்பரப்புகளில் இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளிற்காக நிலங்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 99 வருட குத்தகைக்கு நிலங்களை கொள்வனவு செய்யத் தலைப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நிலங்களைக் கொள்வனவு செய்வதால் காணிகளுக்கான பெறுமதி விலை அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றுமில்லாதாவாறு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ள உள்நாட்டு சுற்றுலாத்துறையினர், நாட்டின் சில பகுதிகளில் இது பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சுற்றுலாப்பயணிகள் நீண்டகாலம் நாட்டில் தங்கியிருப்பதால் உருவாகும் பாதிப்புகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறையினர், இவர்கள் உரிய பதிவுகள் இன்றி வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...