rtjy 73 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

Share

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சியை இரண்டாம் அரையாண்டில் காணலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைமையானது இனிவரும் காலங்களிலும் தொடர்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிஎன்பிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

முன்னைய நிலவரத்தையும் தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது எந்தவொரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை. அத்துடன் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.

பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் மேலும் சிலவற்றின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இந்த ஆண்டு முழுவதும் ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. பங்குச் சந்தை விலைக் குறியீடும் நேர் பெருமானத்தில் இருப்பதைக் காணலாம்.

எனவே பொருளாதாரத்தின் மீட்சியை ஆண்டின் இரண்டாம் பாதியில் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மையில் சுமார் 300 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வாகன இறக்குமதி தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த போதும் அதற்கான முடிவினை எடுக்கும் சாதகமான சூழல் தற்போது இல்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டியிருப்பதாகவும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து கூறப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...