24 66593f7be7fd0
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை

Share

பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை

பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது செஹ்பாஸ் செரீப்பை (Muhammad Shehbaz Sharif) இஸ்லாமாபாத்தில் சந்தித்த இலங்கையின் பௌத்த தலைவர்கள் குழு, பிரதமருடன் பௌத்த உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.

தூதுக்குழுவில் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wikramanayaka), வியட்நாம், தாய்லாந்து மற்றும் நேபாள பௌத்த தேரர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

இதன்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்கு பாகிஸ்தானில் காந்தார கலை மற்றும் கலாசார வடிவில் செழித்து வளர்ந்த புராதன பௌத்த பாரம்பரியம் குறித்து பாகிஸ்தான் பெருமை கொள்கிறது என்பதை பிரதமர் செரீப் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு தனது அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் தூதுக்குழுவினர் பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பாகிஸ்தானுடன் ஒத்துழைக்க தங்கள் தீவிர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...