இலங்கைசெய்திகள்

பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை

Share
24 66593f7be7fd0
Share

பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை

பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது செஹ்பாஸ் செரீப்பை (Muhammad Shehbaz Sharif) இஸ்லாமாபாத்தில் சந்தித்த இலங்கையின் பௌத்த தலைவர்கள் குழு, பிரதமருடன் பௌத்த உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.

தூதுக்குழுவில் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wikramanayaka), வியட்நாம், தாய்லாந்து மற்றும் நேபாள பௌத்த தேரர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

இதன்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்கு பாகிஸ்தானில் காந்தார கலை மற்றும் கலாசார வடிவில் செழித்து வளர்ந்த புராதன பௌத்த பாரம்பரியம் குறித்து பாகிஸ்தான் பெருமை கொள்கிறது என்பதை பிரதமர் செரீப் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு தனது அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் தூதுக்குழுவினர் பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பாகிஸ்தானுடன் ஒத்துழைக்க தங்கள் தீவிர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...