24 660cebaf03c75
இலங்கைசெய்திகள்

தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திட்டம்..!

Share

தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திட்டம்..!

தென் கொரிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் காற்றுச்சீரமைப்பிகளின் (air conditioners) ஆற்றல் திறன் சோதனைக்கான ஆய்வகம் இலங்கையில் விரைவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சை வீட்டு வாயு உமிழ்வை குறைக்கும் நோக்கத்திலேயே தென் கொரியா இந்த ஆய்வகத்தை நிறுவ உதவுவதற்கு முன்வந்துள்ளது, அதன்படி இந்த திட்டத்திற்கு கொரியா எரிசக்தி ஏஜென்சி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில், ஆய்வகத்தை நிறுவுதல் மற்றும் தேவையான மனிதவள பயிற்சி ஆகியவற்றை இந்த ஆண்டிற்குள் (2024) நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தென்கொரிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கையொப்பமிடவுள்ள குறிப்பாணை மற்றும் பரிந்துரைகளும் வெளியிடப்படவுள்ளது.

இதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இந்த உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிந்துரைகளில் கைச்சாத்திடுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...