25 684a4d1d711cc
இலங்கைசெய்திகள்

பொதுமன்னிப்பில் விடுதலையான கைதிகள் பட்டியலை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

Share

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி கடந்த மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட 388 கைதிகளின் முழுப் பட்டியலை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கைதிகளின் பரிந்துரை பட்டியல் மற்றும் அவர் அங்கீகரித்த உரிய பட்டியல் இரண்டும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் நிதி குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெற வேண்டும் எனவும் ஜனாதிபதி யார் யாருக்கெல்லாம் மன்னிப்பு வழங்க அங்கீகாரம் அளித்தார் என்பதை பற்றிய பொறுப்பும், மக்களுக்கு பதிலளிக்கும் கடமையும் இருக்க வேண்டும்,” என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...