8 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – ஒன்றிணையும் பிரதான கட்சிகள்

Share

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு நேற்று முடிவு செய்திருந்தது.

நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர்.

எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், முன்னதாக இந்த கலந்துரையாடல்கள் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.

அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு தனக்கு நெருக்கமான ஒருவருடன், இது தொடர்பில் உரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இரு கட்சிகளின் இரண்டு பொதுச் செயலாளர்களின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...