6 16
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் வெற்றி உறுதி! திருக்கோவில் பிரசாரத்தில் பிள்ளையான் திட்டவட்டம்

Share

ரணிலின் வெற்றி உறுதி! திருக்கோவில் பிரசாரத்தில் பிள்ளையான் திட்டவட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்போது, கிழக்கு மக்களும் அதில் பங்குதாரர் ஆக வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று(11) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, யாழ்ப்பாணத்திலிருந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு அழிவை நோக்கி நகர்வதா, ஜனாதிபதியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அமைச்சு ஒன்றைப் பெற்றுக்கொள்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

12 15
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: சீனாவிற்கான தனது விஜயத்தைத் தள்ளிவைக்க டொனால்ட் ட்ரம்ப் சமிஞை

ஈரான் போர் காரணமாக மூடியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

11 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு: வாகன உரிமையாளர்கள் கடும் அவதி!

ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை மீண்டும்...