2 18
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் 10 நாட்களுக்கு போலிச்செய்தி அலை வீசும்

Share

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் 10 நாட்களுக்கு போலிச்செய்தி அலை வீசும்

பதவிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் தமது கட்சி அரசாங்கத்தைக் கைவிடும் என்று கூறப்படும் கருத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார நிராகரித்துள்ளார்.

“முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொன்னார்கள். தற்போது எங்கள் அரசாங்கம் ஆறு மாதங்கள் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்” என்று நேற்று குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமது தலைமையில் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பத்து நாட்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான செய்திகள் அலை வீசும் என்றும், இருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தி வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் “எங்கள் எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். எமக்கு எதிரான பாரிய சதித்திட்டம் தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று அனுரகுமார கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....