போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்
இலங்கைசெய்திகள்

போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்

Share

போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்

தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும்; மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன,

30 வருடகால யுத்தம் தமிழ் மக்களுக்கு பாரிய உயிரிழப்புக்களையும், பொருளாதார அழிவுகளையும் விளைவித்திருக்கிறது. இதற்கு காரணமான காரண கர்த்தாக்களது முகத்திரைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கிழிப்பேன்.

இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு தான் நிலவுகின்றது என்றால், இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களால் சகோதரர்களாக நடத்தப்படாமல் மாற்றான் தாய் மக்களாக கொல்லப்படுவது ஏன்? இவை தொடர்பான உண்மைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்துவேன்.

இவர்களால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான கொலைகளின் 27900 படங்கள் என்னிடம் இருக்கிறது. மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகள் தொடர்பான காணொளிகள் என்னிடம் இருக்கிறது.

அதனை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்க நான் தயார். அதற்கு எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். அவற்றை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது என்னுடைய கடமையாகும்.

01.09.2021 அன்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உடனடியாக விசாரைணகளை ஆரம்பிக்கும் படி நான் சமர்ப்பித்த போர் இரகசிய விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...