Selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களின் போராட்டத்தை சிங்கள மக்கள் ஏற்க ஆரம்பித்துள்ளனர்! – சிறந்த மாற்றம் என்கிறார் செல்வம்

Share

” தமிழர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்பதை சிங்கள மக்களும் இன்று ஏற்க ஆரம்பித்துள்ளனர். அது பற்றி கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது சிறந்த மாற்றமாகும். ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் இருந்திருந்தால், இந்நேரம் தமக்கு உணவளித்திருப்பார்கள் என சிங்கள மக்கள் கருதுகின்றனர். அவ்வாறு உணவு பொதி வழங்கப்பட்ட வரலாறும் உள்ளது. அரசுக்கு எதிராக மூவின மக்களும் போராடுகின்றனர். சிறந்த புரிந்துணர்வு வந்துள்ளது.

ரம்புக்கனையில் கொல்லப்பட்டவருக்கு வடக்கு, கிழக்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. காலி முகத்திடல் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந் நாட்டில் நாம் அனைவரும் ஒன்றுமையாக வாழ வேண்டும். எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...