rtjy 97 scaled
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Share

சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நீர் நிலைகளில் நீராடச் செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப் பகுதி மற்றும் கன்னெலிய பகுதி நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் போன்றவற்றில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீர் வீழ்ச்சிகளைக் கொண்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே நீர் நிலைகளில் குறிப்பாக நீர் வீழ்ச்சிகளில் நீராடுவது மற்றும் நீர் நிலைகளில் இறங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, கன்னெலிய மற்றும் சிங்கராஜ வன நீர் வீழ்ச்சிகளை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...