rtjy 97 scaled
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Share

சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நீர் நிலைகளில் நீராடச் செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப் பகுதி மற்றும் கன்னெலிய பகுதி நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் போன்றவற்றில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீர் வீழ்ச்சிகளைக் கொண்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே நீர் நிலைகளில் குறிப்பாக நீர் வீழ்ச்சிகளில் நீராடுவது மற்றும் நீர் நிலைகளில் இறங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, கன்னெலிய மற்றும் சிங்கராஜ வன நீர் வீழ்ச்சிகளை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...