17 14
இலங்கைசெய்திகள்

சிகிரியா செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சி தகவல்!

Share

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை இரவு நேரங்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி, சீகிரியாவை தற்போது இரவு நேரங்களிலும் பார்வையிட அனுமதித்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு(2025) கடந்த வருட சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமான பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...