20 2
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெற்றிடம்: ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Share

ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெற்றிடம்: ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாட்டில் தற்போது ஆடைத்தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றுள்ளமை மற்றும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த ஆய்வின் படி ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது சுமார் நாற்பதாயிரம் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

ஏற்றுமதிக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை செய்து முடிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ள இலங்கை ஏற்றுமதி கைத்தொழில் சபையின் மேலதிக செயலாளர் ருமேஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆடைத் தொழிலுக்கான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கண்டுபிடிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்றுமதி வருமானம் கடந்த மாதம் 1165. 4 மில்லியன் அமெரிக்கன் டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பானது 4.18 வீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதி, தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி நடவடிக்கைகளின் முன்னேற்றமே, இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...