16 28
இலங்கைசெய்திகள்

அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை!

Share

அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை!

அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ விநியோகப் பிரிவின் அறிக்கைகளின் பிரகாரம் சுமார் 300 மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறையாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களது சங்கத்தின் அழைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமால் சஞ்சீவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யும் பொறிமுறைமையில் ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகாரிகள் இருந்தால் அவர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துப்பொருட்கள் இவ்வாறு பற்றாக்குறையாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் இந்த மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக காணப்பட்டதாகவும் இதனால் சில மரணங்கள் பதிவானதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென டொக்டர் சமால் சஞ்சீவ கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...