20
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: பேராயரின் மௌனம் குறித்து ராஜபக்‌ஷ தரப்பு கேள்வி!

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரத்தில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது மௌனம் காப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் நடத்தியது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்பது வருட காலப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரைக் கொண்ட எமது கட்சிக்கு, குண்டுகளை வைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் கிடையாது என்று குட்டியாராச்சி குறிப்பிட்டார்.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிந்து கைது செய்வோம் என்று தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் முழக்கமிட்டனர். தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எமது ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியில் இறங்கிப் போராடினார். ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு அவர் மௌனமாக இருக்கின்றார். பேராயர் மீண்டும் வீதிக்கு வந்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்குமாறு இந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...