கொழும்பில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் சாவு; இருவர் படுகாயம்

சுட்டுக்கொலை 1

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

30 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

Exit mobile version