Chirani Bandaranaike and Chandrika
இலங்கைஅரசியல்செய்திகள்

சந்திரிக்கா காலம் குறித்து பெருமைப்படும் சிராணி!-

Share

ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவி வகித்த போது, உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் ஜனாதிபதி பதவி காலத்தை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது;

‘நாட்டில் நான் மதிக்க கூடிய மிகவும் சொற்பளவிலான நபர்களில் முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சிறப்பிடம் பெறுகிறார். சேவையினை அடிப்படையாகக் கொண்ட பொது நிகழ்வுகளிலும், பதவிப் பிரமாணங்களின் போதும் சந்தித்துள்ளேன்.

1993 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டேன்.

ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு அவர் நீதித்துறைக்கு உயர்மட்ட நிலையினை வழங்கினார். நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க வழங்கிய ஒத்துழைப்பு அளப்பெரியது என்றும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப்...

MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...