tamilni 234 scaled
இலங்கைசெய்திகள்

சவேந்திர சில்வாவின் சிறப்பு விமான பயணம்: விளக்கம் அளித்த இந்தியா

Share

சவேந்திர சில்வாவின் சிறப்பு விமான பயணம்: விளக்கம் அளித்த இந்தியா

இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவும் அவரது மனைவியும் சிறப்பு ஜெட் விமானத்தில் பயணிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜெனரல் சில்வா டெல்லியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை இந்த வசதியை செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

இந்திய இராணுவ கல்லூரியில் நடைபெற்ற அணிவகுப்பில் அவர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோதே இந்தப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது .

ஜெனரல் சில்வா தனது டெல்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அவர் டெல்லிக்கு சென்றடைந்தவுடன், டெஹ்ராடூனுக்கு ஜெட் விமானத்தில் பயணம் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன.

இதன்படி முக்கியஸ்தர்களுக்கான நிலையான நெறிமுறையின்படி, ஜெனரல் சில்வா, அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்த ஜெட் விமானத்தை இந்திய விமானப்படை தயார்ப்படுத்திக்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...