5 50
இலங்கைசெய்திகள்

பல லட்சம் பெறுமதியான தங்க நகையை கொள்வனவு செய்த செவ்வந்தி! டுபாயில் இருந்து வந்த பணம்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 500,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சஞ்சீவவை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படும் டுபாயை சேர்ந்த கெஹல்பத்தர பத்மே, செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 100,000 ரூபாவை அனுப்பியுள்ளார்.

இதனையடுத்தே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி அளுத்கடை நீதிமன்றத்தில் வைத்து செவ்வந்தியால் கொலை செய்யப்பட்டார்.

செவ்வந்தி, தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தாயும் இளைய சகோதரரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் வழிகாட்டுதலின் பேரில் இக்கொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தற்போது கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...