செய்திகள்அரசியல்இலங்கை

‘வரிசை’ என்பதே இன்று இலங்கையின் நாமமாக மாறியுள்ளது! – அரசை சாடுகிறார் ரோஹினி

rohini wijerathna
Share

“வரிசை” என்பதே இன்று இலங்கையின் நாமமாக மாறியுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” முன்னர் எல்லாம் ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் அடையாளமாக, நாமமாக இருந்தது. எமது நாட்டுக்கு நற்பெயரும் இருந்தது. ஆனால் நாட்டில் இன்று எதற்கெடுத்தாலும் வரிசை. உணவுப் பொருட்களை வாங்கக்கூட வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால் வரிசை என்பதே நாட்டின் நாமமாக மாறியுள்ளது.

அதேவேளை, பெண்கள் பற்றி இன்று பேசப்படுகின்றது. ஆனால் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்திய ஹிருணிக்காவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது. நாட்டிலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கவே அவர் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றார்.

நாம் 15 ஆம் திகதி கொழும்பில் வந்து போராடுவோம். கொழும்பை சுற்றிவளைப்போம். முடிந்தால் தடுத்து பாருங்கள் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...