299135626 6327510847276458 5058916452112914948 n
இலங்கைசெய்திகள்

செப். 15 இல் திறப்புவிழா காண்கிறது தாமரை கோபுரம்

Share

கொழும்பு தாமரை கோபுரம் அடுத்த மாதம் செப்ரெம்பர்- 15 ஆம் திகதி திறக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோபுரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்ரெம்பர் 16ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். எனினும் பின்னர் மக்கள் யாரும் பார்வையிட எந்தவொரு வணிக செயற்பாட்டிற்கோ பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது கொழும்பு தாமரை கோபுரம் தனது அடுத்த கட்ட வணிகத் திட்டத்திற்கான முதலீட்டு வாய்ப்புகளுக்காக திறக்கப்படவுள்ளது. இதற்கான விளம்பரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இங்கு சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கின்றது.

இந்த வாய்ப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள வர்த்தகர்கள் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...