tamilnaadi 93 scaled
இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

Share

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்கியுள்ளனர்.

இது மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மரியாதையை அவருக்கு பொலிஸார் கொடுத்திருக்கவில்லை.

இதுமட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பூஜை நிகழ்வுகளின்போது மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆறு மணிக்கு பின்னரும் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸார் இவ்வாறான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமன்றி மாலை வேளையில் குடிநீருடன் ஆலயத்திற்கு உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில். அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...