7 30
இலங்கைசெய்திகள்

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

Share

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

சமஷ்டி தீர்வு கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார் என ஜனசத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்

அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது என சீலரத்தன தேரர் ( Seelarathana Thero) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடக சந்திப்பொன்றின் போதே இவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பிவருகின்றார். அவர் கொழும்பில் தான் வாழ்கின்றார்.

கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்த வேண்டும்?

அதுமட்டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.

சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் தேவைக்கேற்ப 13 ஐ நடைமுறைப்படுத்தவே, அதிகாரத்தை பகிரவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடாது.

கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்டினால் நாம் சும்மா இருக்க மாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டிவருமோ தெரியவில்லை.

இனவாதத்துக்கு இடமளிக்ககூடாது. இனவாதத்தை தூண்டினால் நாடு முன்னேறாது. டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார்.

டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என சீலரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...