7 30
இலங்கைசெய்திகள்

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

Share

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

சமஷ்டி தீர்வு கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார் என ஜனசத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்

அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது என சீலரத்தன தேரர் ( Seelarathana Thero) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடக சந்திப்பொன்றின் போதே இவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பிவருகின்றார். அவர் கொழும்பில் தான் வாழ்கின்றார்.

கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்த வேண்டும்?

அதுமட்டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.

சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் தேவைக்கேற்ப 13 ஐ நடைமுறைப்படுத்தவே, அதிகாரத்தை பகிரவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடாது.

கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்டினால் நாம் சும்மா இருக்க மாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டிவருமோ தெரியவில்லை.

இனவாதத்துக்கு இடமளிக்ககூடாது. இனவாதத்தை தூண்டினால் நாடு முன்னேறாது. டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார்.

டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என சீலரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

ஜீவன் தொண்டமானுக்கு இன்று திருப்பத்தூரில் திருமணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின்...

aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...