இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர் சமுதிதவின் பாதுகாப்பை அதிரடியாக நீக்கிய அநுர அரசு

Share
2 1 18
Share

ஊடகவியலாளர் சமுதிதவின் பாதுகாப்பை அதிரடியாக நீக்கிய அநுர அரசு

சிங்கள ஊடகவியலாளரான சமுதித சமரவிக்கிரமவுக்கு (Chamuditha Samarawickrema) வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு (Gotabaya Rajapaksa) எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித சமரவிக்கிரவை அச்சுறுத்தும் வகையில் சமுதித்தவின் வீட்டுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ரணிலின் ஆட்சிக்காலத்தில் சமுதித்தவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றும், அவரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார, இன்றைய அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் குரல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நேற்றையதினம் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் ஆரம்பம் என்று சமுதித சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...